வியாழன், 30 ஜூலை, 2009

இமையசைவில்

அடியே
உன் இமையசைவில்
புறப்படும் புயல் காற்று,
என் இதய மலர்களை
பிய்த்து எரிவதேன்!

செவ்வாய், 21 ஜூலை, 2009

இதயத்தின் இசை

இதுவரை

வெறும் ஓசையாகவே இருந்த

என் இதய துடிப்பு ,

நீ வந்த பின் -- என்னை

மயக்கும் இசையாகவே இசைக்கிறது..

கண்ணீர்

நீ சொல்லாவிட்டால் என்ன,

உன் விழிகள் சிந்தும் கண்ணீர்

சொல்லுமே..நம் காதலை !

திங்கள், 20 ஜூலை, 2009

என் எழுத்துக்கள்

நீ இங்கு வாசிப்பது எழுத்துக்கள் அல்ல,
என் இதயத் துடிப்புகளை!
நீ வாசிக்க மாட்டாய் என்றவுடன்,
எழுத்துக்களும், இதயமும் ஒன்றுசேர
நின்று போனதே...
கொஞ்சம் வாசித்து விட்டுதான் செல்லேன்,
இதயமும், எழுத்துகளும்
துடித்து விட்டுத்தான் போகட்டுமே..

தனி தீவாய்

பெருங்கண்டமாய் இருந்தவனை..
உன் நினைவலைகளால்
சின்னஞ்சிறு தீவாய்
மாற்றியவள்!

திங்கள், 13 ஜூலை, 2009

எழுத்துக்கள் மூலம் தூது

என்
தனிமையின் சோகங்களை
உன்னிடம் கூற,
தென்றலையோ, வான்மதியையோ
என்னால்
தூது அனுப்ப இயலாது....
இந்த எழுத்துக்களை தவிர!

பேரிடியாய்

உனக்கென்ன
இரண்டு நாட்கள்தானே பேசவில்லை
என்று சொல்லிவிட்டாய்..
எனக்கல்லவா தெரியும்
என் இமைகள் மோதிய சத்தம் கூட
பேரிடியாய் இருந்ததென....

இத்தனையும் செய்துவிட்டு

ஓடியாடிக் கொண்டிருந்தவனை
ஓரிடத்தில் அமரச்
செய்தாய் !
ஓயாமல் பேசிக் கொண்டிருந்தவனை
அமைதியாக இருக்கச்
செய்தாய்!
எல்லோரும் சிரிக்கும் போது
என்னை மட்டும் அழச்
செய்தாய்!
இத்தனையும் செய்துவிட்டு - எப்படி
அன்பே
ஒன்றுமே செய்யாததுப் போல்
சிரிக்கிறாய்!

இரத்த அணுக்கள்

என்
உடலெங்கும் பாயும் இரத்த அணுக்கள்,
என்
இதயம் கடக்கும் போது மட்டும்
புன்னகை பூக்கிறதே ,
நீ அங்கு வசிக்கிறாய் என்பதாலா?

வெள்ளி, 10 ஜூலை, 2009

மறுபிறவி

உயிரற்றவைகளாக இருக்கும்
என் எழுத்துக்கள் யாவும்,
நீ வாசித்தவுடன்
மறுபிறவி எடுக்கிறதே....

வியாழன், 9 ஜூலை, 2009

இதய ஓசை

உன் நினைவாய்
இதயத்தோடு அணைத்திருந்த
புத்தகம் தந்தாய்!
சத்தியமாய் சொல்கிறேன்
தினம்தோரம் அதை காதில்
வைத்து கேட்கிறேன்...
உன் இதயத்தின் ஓசை
கேட்கிறதா என்று....

தாயாகிறாய்

நான் பிறந்த போது
பெயர் வைத்து கொஞ்சிய
என் தாயைப்போல்,
என்னை
தினம் ஒரு பெயர் வைத்து
கூப்பிடுவதால் ....
நீயும் ஒரு தாயாகிறாய்!

அன்பை பங்குபோட

உன்னை பெற்ற அண்ணைக்காவது
அவள் அன்பை பங்குபோட
மூன்று பெண் பிள்ளைகள் உண்டு ....
உன் இதயம் பெற்ற எனக்கு
நீ மட்டும்தானடி கண்ணே ...

கலைந்த என் கேசம்

உனக்கென்ன என்
தலைகேசம் கலைத்து சென்றுவிட்டாய்...
கலைந்தது என் கேசம்
மட்டுமா...

கவிப்பேச்சு

நீ பேசும் யாவையும்
கவிதையாக எழுதி விடுகிரேனாம்..
குற்றஞ்சாட்டுகிறாய்!
அடி வானவில்லே
இன்னுமா புரியவில்லை நீ
பேசுவதே கவிதையாக........

உரிமை

நான் எழுதியவைகளை படிப்பதற்கு
உனக்கு உரிமை இல்லைஎன்கிறாய் ...
இது எப்படித்தெரியுமா இருக்கிறது,
இதயத்திடம் மூச்சுக்காற்று சொன்னதாம்
"என்னை பிடித்து வைக்க உனக்கு
உரிமை இல்லையென்று"!

கைரேகை ஓவியம்

நீ கொடுத்த நூலின்
ஓவியம் வரைந்த பக்கங்களை விட,
வரையாத பக்கங்களையே அதிக
நேரம் பார்க்கிறேன்!
உன் கைரேகை வரைந்த ஓவியங்களை
ரசித்தபடி!

செவ்வாய், 7 ஜூலை, 2009

காதலின் ஆழம்

உன் மீது நான்
வைத்திருக்கும் காதலின்
ஆழமானது!
உன் இமைகளை மூடியபின்
ஏற்படும் கருமை நிறத்தின்
அந்தமானது!

திங்கள், 6 ஜூலை, 2009

இமை இதழ்கள்

அதிகாலை
மலரிதழ்கள் விரிவதை காண்பது
அதிசியமாம்!
நான்தான் தினம்தினம் நீ
உறங்கி கண்விழிக்கும் போது
உன் இமை இதழ்களை
காண்கிறேனே!

தலையணை ரேகைகள்

உறங்கியப்பின்னும்
உன்
நினைவாகவே நான் என்பதற்கு ,
என்
தலையணை ஈரரேகைகளே
சாட்சி!

கண்களோரமாய்

தொலைபேசியில்
உன்னோடு பேசி முடித்தவுடன்,
என் கண்களோரம் வழியும்
ஈரம் சொல்லுமே,
என் காதலை உனக்கு!

எல்லாமுமாய் நீ

எங்கெங்கு காணினும்
நீ!
பிறகுதான் தெளிந்தேன்
என் விழிகளாய்
நீ!
பிறகென்ன வியப்பு!

உன் நினைவுகள்

உலர்ந்த உதடுகளை
தன்னையறியாமல்
ஈரப்படுத்தும் நாவாய்
உன் நினைவுகள் !

வசந்தகால முதற்தென்றலே

இலையுதிர் காலம் முடிந்து
வசந்தகாலத்தின் முதற் தென்றலாய்
நீ,
தொட்டு செல்லும் அந்த
கணத்திர்க்காக வருடம் முழுமையும்
காத்திருக்கும் உலர்ந்த மரமாய்
நான்..
தொட்டுதான் செல்லேன்.....

புதன், 1 ஜூலை, 2009

உன் இமைகளின் அரவணைப்பில்

அடுத்த பிறவியலாவது - உன்

விழிகளாக பிறக்க வரம்

வேண்டும்!

உன் இமைகளின் அரவணைப்பில்

ஒருமுறையாவது ஆசைதீர

துயில வேண்டும்!