வெள்ளி, 10 அக்டோபர், 2008

பிரிவு

ஒரு வகையில் நீயும் சுனாமியும்
ஒன்றுதான்
நீ பிரிந்த போது
நம் நினைவுகளை என்னிடம்
விட்டு சென்றதை விட
உன்னுள் எடுத்துக்கொண்டதுதான்
அதிகம்.



வியாழன், 9 அக்டோபர், 2008

ஆன்சைட்

வெள்ளைத் தோள் மங்கைகள் ,
டாலரில் சம்பளம்
starbucksil காபி,
mexican restaurantil பரிட்டோ - என்ற போதும்
அம்மா வைக்கும் ரசத்திற்கும்
அப்பா கலந்து தரும் சாம்பார் சாதத்திற்கும்
ஏங்கியது மனம்.

என் முதல் ஆன்சைட் அனுபவம்


நம்ம எழுதுன உடனே நிறைய பேர் வந்து படிப்பாய்ங்க , நாமளும் கொஞ்சமாவது நண்பர் வட்டம் முடியாட்டி ஒரு சதுரத்தையாவது சேக்கலாம்னு பாத்தா ஒருத்தர் கூடே ம்ம்... வந்து எட்டி கூட பார்க்க மாட்டேன்றாங்க . தினமும் யாரும் நம்மள கண்டுக்க மாட்டேன்றானுங்கன்னு, அந்த சூரியன் தன்னூட வேலைய செய்யாம இருக்கா? இல்லே , யாரும் சோறு கூட வைக்க மாட்டேன்றானுங்கன்னு அந்த காக்காதான் கத்தாம இருக்கா(டேய் கொஞ்சம் அடுங்குடா) . எழுதுவது நம் வேலை (அங்க யாருப்பா "படிச்சிட்டு தலைய பிச்சிகிறது எங்க வேலை" ன்னு சொல்றது) . நம்ம ஆத்ம திருப்திக்கு எழுத வேண்டியதுதான்.சரி அத விடுங்க , நான் முதல்ல பறந்தது பத்தி சொல்றேன். விமானதுலதான் நான் ஒரு சாப்ட்வேர் தொழிலாளி , எங்க டீம் தலைவர் தம்பி நீ அமெரிக்கா போறேன்னு சொன்ன கனத்துலேந்து மனசுக்குள்ள ஏதோ அந்த பில் gates க்கே மருமகனா ஆகா போகிற மாதிரி ஒரு நெனைப்பு. அத விட விமானத்துல பறக்க போறேன்னு நெனைக்கும் போதே ஒரே சிலிர்ப்பு. உங்களுக்குத்தான் தெரியுமே , அமெரிக்கா கிளம்பரோம்னு சொன்ன உடனே வீட்டுல பருப்பு போடிலேந்து அரப்பு புடிவரைக்கும் எல்லாத்தையும் பேக் பண்ணிட்டாங்க. இன்னொரு விஷயம் இருக்குங்க , சாப்ட்வேர் மக்களுக்கே உரித்தான பாரம்பரியமான விருந்து கலாச்சாரம், ஏற்கனவே விருந்து கொடுத்தவன் எல்லாரும் பழைய படுத்துல வர்ற பழிவாங்க துடிக்கிற வில்லன் ரேஞ்சுக்கே பாக்குறான். உயிர்த்தோழன் ஒருத்தன் காது பக்கத்துல வந்து " மாட்டுனடி மாப்புள" ன்னு நக்கல் வேற.
இது எல்லாம் முடிஞ்சு, கெளம்புற நெருத்துல அட்வைஸ் பண்றதுக்கே வண்டி வச்சிக்கிட்டு வருவாய்ங்க . இதுல நம்ம தாத்தா , பாட்டி வேற "பேராண்டி திரும்ப வரும்போது வெள்ளக்கார பொண்ண புடிச்சிகிட்டு வந்துடாதேன்னு " ஒரு அட்வைஸ் (" உள்ளுர்லேயே டூ வீலேர் ஓட்ட முடியல , வெளியூர் போயா ராக்கெட் ஓட்ட போறேன்") . இது எல்லாம் முடிஞ்சு கிளம்பற நேருத்துல கண்ணுல தண்ணி கட்டும் , எங்க வாய் விட்டு அழுதா கௌரவம் குறைஞ்சிடும்னு , சும்மா தங்க பதக்கத்துல வர்ற சிவாஜி கணக்கா ஒரு நடிப்பு நடிச்சிட்டு போய் ப்ளான்ல உட்கார்ந்தேன்.
கொஞ்ச நேரத்துல நம்ம சிங்கார சென்னை ஒரு சின்ன புள்ளியா தெரிஞ்சு மறைஞ்சி போச்சு. நல்ல வேலை பக்கத்துல திருச்சிலேந்து ஒரு அண்ணன் பேச கிடைத்தார் . nallaa பேசி நண்பர் ஆயிட்டாரு. அப்புறம்தான் கச்செரியே , விமான பணிப்பெண் ஒருவர் சாப்பாடு கொண்டு வந்து வைத்தார். விமானத்தthula சாப்பிடுவதற்கு ஒரு பெரிய போராட்டம்மே நடத்தன்னும்ங்க . காபி கேட்டா எல்லாம் தனி தனியா கொண்டு கொடுப்பாய்ங்க . காபி தண்ணி தனியா, சக்கரை தனியா, பால் கிரீம் தனியா. நாமெல்லாம் பால் கிரீம் முத தடவை பாக்குறோம். திருவிழாவுல காணாம போன பையன் மாதிரி முழிச்சிக்கிட்டு இருந்தேன். பக்கத்துல இருந்த அண்ணன் தான் ,உதவி செஞ்சாரு. என்ன நடந்ததுன்னு ஒரு சின்ன திரைக்கதை கீழே..

அவரு : டேய் என்னடா முழிச்சிக்கிட்டு இருக்கே

நான்: இல்ல நே , காபி கேட்ட தனி தனியா கொண்டு வந்து கொடுத்துட்டு போய்ட்டா அதான் ஒன்னும் புரியல.

அவரு: (புல் மப்பு) இதுக்குதாண்டா என்ன மாதிரி ஒருத்தரு பக்கத்துல இருக்கனும்ன்னு , சரி முதல கிரீம் பேக்க கிழிச்சு அந்த காபி தண்ணியில ஊத்து.

நான்: சரிண்ணே , ஊத்திட்டேன்

அவரு: சரி , இப்ப தேவையான சக்கரைய அதுல கொட்டு,

ன்னு சொல்லிக்கிட்டு இருக்கும்போதே, இந்தாண்ட பக்கம் உக்காந்துகிட்டு இருக்குற வெள்ளைக்காரன் என்னை ஒரு மாதிரி பாக்குறான்,

கொஞ்ச நேரத்துல என் காபி ஒரு மாதிரி திரிஞ்சி போச்சு... மறுபடியும் அந்த அண்ணன் கிட்ட

நான்: அண்ணன், அண்ணன்

அவரு: என்னடா , எல்லாத்தையும் கலந்த்துட்டீயா ,

நான்: இல்லே ந , காபி ஒரு மாதிரி ஆயிடிச்சி, ன்னு சொன்ன உடன

அவரு: என்னடா பண்ணனு கேட்டாரு.

நான் உடனே இந்த பால் எடுத்து இந்த கப் காபில கலந்தேன்னு சொன்னேன், அவரு உடன "அடப்பாவி எதுக்குடா பால , ஆப்பிள் juice la கலந்தேன்னு சொன்னாரு".

இப்ப புரிஞ்சது ஏன் nammala பாத்து அந்த வெள்ளைக்கார பய சிரிச்சானு .

இது எல்லாம் முடிஞ்சி ஒரு வழியா சிகாகோ , இறங்கி போர்ட் ஒப் என்ட்ரி போட்டு , விமான நிலையத்த விட்டு , வெளியல வந்து நண்பன பார்த்து கட்டி பிடிச்சு , மச்சான் எப்படி டா இருகேன்னு கேட்டா " டேய் முதல்ல என்ன கட்டி பிடிக்காதடா , இங்க அதுக்கு வேற அர்த்தம்ன்னு sollittu என்னோட லக்கேஜ எடுக்க போய்ட்டான் .

கொஞ்சம் தூரம் தள்ளி பார்த்தா , நம்ம ஊரு உலக நாயகன் கமலுக்கே சவால் விடுற மாதிரி ஒருத்தர் , ஒரு பெண்ணோடு கட்டி பிடிச்சு முத்தம் கொடுத்துகிட்டு இருக்காரு. அடப்பாவிங்கலானு நெனைச்சிக்கிட்டு திரும்பும் போதே ....... speakerlae ஒருத்தர் "Welcome to land of yankees, chicago" ன்னு ஒரு announcement.

விவேக் சொல்லற மாதிரிதான் , இந்தியாவுல வெளியல "Piss" அடிக்கலாம் "kiss" அடிக்க கூடாது , ஆனா இங்க "kiss" க்கூட அடிக்கலாம் ஆனா கண்டிப்பா "piss" மட்டும் அடிக்க கூடாதுன்னு.....

திங்கள், 8 செப்டம்பர், 2008

கீதா அக்கா

இது என் முதற் பதிவு , இலக்கண பிழைகள் இருந்தால் தயவு செய்து மன்னிக்கவும்.

அதிகாலை வேளையில் கதிரவன் தனது ஆட்சியை அப்போதுதான் கிளை பரப்பிக் கொண்டுஇருந்தான். ராஜபாளையத்திற்கு புதிதாக குடி பெயர்ந்த சந்துரு , டீ வாங்குவதற்காக தேநீர் கடை நோக்கி தூக்கு வாலியை எடுத்து கொண்டு ஓட தொடங்கினான்.

ஓட தொடங்கிய அவனை அந்த இருமல் சத்தம் தடுத்து நிறுத்தியது. அவன் இந்த ஊருக்கு வந்த நாள் முதல் அந்த இருமல் சத்தம் அவனை எரிச்சல் ஊட்டியது என்பதை விட பயமுரத்தியது என்றுதான் சொல்ல வேண்டும். இரவு நேரங்களில் அம்மாவிடம் கதை கேட்கும் போது எல்லாம் அந்த சத்தம் அவனை பீதிக்கொள்ள செய்துள்ளது. மெதுவாக அந்த சத்தம் வந்த இடத்தை எட்டி பார்த்தன். அங்கு ஒரு மெல்லிய உருவம் தாங்கிய ஒரு பெண்மணி , அடிவயிறு உள்வாங்க , தன் உயிரே போவது போல் இருமிகொண்டிருந்தார். இவனுக்கு அந்த உருவம், தன் அம்மா கதைகளில் வரும் சூன்யகார கிழவிப் போலவே இருந்தது. அந்த உருவம் இவனை பார்க்கும் முன்னே அங்கிருந்து ஓட்டம் பிடித்தான்.

தேநீர் வாங்கி வந்து தன் அம்மாவிடம் கொடுத்து விட்டு, சிறிது பயத்துடனும் அந்த சத்தத்தை பற்றி கேட்டான்.
அம்மா , "எப்ப பாத்தாலும் அந்த சந்துகுள்ளேர்ந்து இருமல் சத்தம் வந்து கிட்டே இருக்கும்மா , யாரும்மா அங்க இருக்காங்க ?
காலை உணவு சமைத்து கொண்டு இருந்த அவன் அம்மா அதில் கவனம் செலுத்தியவாறே ,
"அங்க கீதா அக்கா அம்மா இருக்காங்கடா , அவங்களக்கு காச நோய் அதான் அப்படி இருமிக்கிட்டு இருகாங்க அந்த பக்கம் எல்லாம் போகாத, உனக்கும் தொத்திக்கும்" என்று சொன்னவுடனே அவனுக்கு பயம் இரண்டு மடங்கானது.
அதிலிருந்து அவன் அந்த பக்கம் போனதே இல்லை என்பதை விட ,இருமிக்கொண்டு இருக்கும் கீதா அக்காவின் அம்மாவின் உருவம் ராட்சஷி போல கற்பனை செய்ததே அதிகம். அவர்களை மட்டும் அல்ல அவனை பொறுத்த மட்டில் மெலிந்த உருவத்துடன் , யாரெல்லாம் இருமுகிரார்களோ அவர்கள் எல்லாம் ராட்சஸ்ர்கலாகவே கற்பனை செய்து கொண்டான்.
அவனக்கு அந்த தெருவில் பிடித்த நபர் என்றால் அவர் கீதா அக்கா மட்டுமே. கீதா அக்கா, அப்போது அவர்களக்கு 12 அல்லது பதிமூன்று வயதுதான் இருக்கும். ரொம்ப அமைதியான முகம், அளவான வார்த்தைகள், கிராமத்திற்கே பொருத்தமான முக வெட்டு , ஒத்த சடையும், சிவப்பு கலரு ரிப்பனும், பூ போட்ட ஆடையும் போட்டு கொண்டு கீதா அக்கா வந்தால் சந்த்ருவுக்கு சந்தோசம் தான். அவன் அப்போது தான் புதிதாக அந்த ஊருக்கு வந்ததால் , விளையாடுவதற்கு கிடைத்த ஒரே சிநேகம் கீதா அக்கா மட்டுமே. அவர் வீடும், சந்த்ருவின் வீடும் எதிர் எதிரே இருந்ததனால், நேரம் கிடைத்த போதெல்லாம் அவர்களோடு விளையாடி கொண்டிருப்பான். எப்போதுமே புன்னகையோடு திரியும் கீதா அக்காவை பார்க்கும் போது எல்லாம், இவனும் புன்னகைப்பான்.
ஒரு அதிகாலை வேலை திடிரென்று அந்த இருமல் சத்தம் நின்று போனது . அந்த சத்தத்திற்கு பதிலாக கீதா அக்காவின் அழு குரல்தான் பெரும் சத்தமாக கேட்டது. பக்கத்து வீட்டு பாட்டி கீதா அக்காவின் தாயார் இறந்து விட்டதாக கூறியது அவன் காதில் விழந்தது .
athan piragu கீதா அக்காவை அவன் பார்த்தது இரண்டு வாரம் கழித்துதான். இவன் அவர்களை பார்த்து சிரித்த போதும், அவர்களின் முகத்தில் அந்த புன்னகை இல்லை, சமையல் செய்த களைப்புதான் தெரிந்தது. கீதா அக்கா தன்னை பார்த்து சிரிக்கதாததால் பெரும் ஏம்மாற்றமடைந்தான். அதன் பின் சந்த்ருவுக்கு நிறைய நண்பர்கள், அதனால் கீதா அக்காவை பற்றிய நினைப்பு கொஞ்சம் கொஞ்சமாக கரைய தொடங்கியது. ஆனால், தன் தாய் மற்றும் பக்கத்து வீட்டு பாட்டியும் கீதா அக்காவை பற்றி பேசும் போது மட்டும், ஆர்வத்தோடு கேட்டு கொள்வான்.
எப்போதாவது கீதா அக்காவை பார்க்கும் போது, எப்படி படிக்கிறே சந்துரு என்ற கேள்விக்கு ஒரு புன்னகை மட்டுமே பதிலாக தந்து விட்டு , சிட்டாக பறந்து விடுவான். சில நாட்களில் சந்த்ருவும் அவனின் பெற்றோரும் வேறு ஒரு புது வீட்டிற்கு குடி பெயர்ந்து விட்டார்கள். சுமார் இரண்டு வருடங்கள் கழித்து தன் வகுப்பு தோழனை பார்க்க கீதா அக்கா வீட்டு பக்கம் போன போது அதே இருமல் சத்தம் கேட்க , தன் நண்பனிடம்
யாருடா அங்க இருக்கறது , ஒரே இருமல் சத்தமா கேக்குது ? என்று கேட்டான்
"அது இங்க கீதான்னு ஒரு அக்கா இருக்காங்கடா , அவங்களுக்கு காச நோயாம் அதான் ஒரே இருமல் சத்தம்" என்று சொன்னது மட்டும் தான் அவன் காதில் விழுந்தது , அதற்கு மேல் அவன் தோழன் கூறியது எதுவுமே அவன் காதில் விழவில்லை.

வீடு திரும்பகையில் , அந்த சந்தை எட்டி பார்த்தான், சில வருடம் முன்னர் அவன் பார்த்த உருவம் போல் , மெல்லிய தேகத்துடன், ஒட்டிய கன்னங்களுடன் கீதா அக்கா இருமி கொண்டு இருந்தார்.

இப்போது மட்டும் ஏனோ சந்த்ருவால் காச நோயால் இருமிக்கொண்டிருக்கும் கீதா அக்காவை ராட்சஷியாக கற்பனை செய்ய முடியவில்லை.